கோரணப்பட்டு மற்றும் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோரணப்பட்டு மற்றும் வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
மின்தடை
கடலூர் மாவட்டம், கோரணப்பட்டு, வளையமாதேவி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், கோரணப்பட்டு, வளையமாதேவி துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை கோரணப்பட்டு மற்றும் வளையமாதேவி பகுதியில் உள்ள வடக்கு வசனாங்குப்பம், தெற்கு வசனாங்குப்பம், எஸ்.புதுக்குப்பம், சிலுவைப்பாளையம், மதனகோபாலபுரம், பிள்ளைப்பாளையம், தர்மநல்லூர், ஊ.ஆதனூர் விளக்கப்பாடி, கத்தாழை, மும்முடிச் சோழகன் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை குறிஞ்சிப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story