போச்சம்பள்ளியில் இன்று மின்தடை

போச்சம்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் இந்திரா அறிவிப்பு கடிதம் வெளியிட்டுள்ளார். இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது போச்சம்பள்ளி, பன்னந்தூர், மத்தூர், ஊத்தங்கரை, குன்னத்தூர், கல்லாவி, துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Tags

Next Story