நீடாமங்கலம், அதம்பார் ,வேலங்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

நீடாமங்கலம், அதம்பார் ,வேலங்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

 நாளை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நீடாமங்கலம், அதம்பார், வேலங்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

அதம்பார், வேலங்குடி ஆகிய மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை அதம்பார் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மருதுவாஞ்சேரி, கடகம்பாடி ,பாகசாலை, விலாகம், எரவாஞ்சேரி ,ஸ்ரீவாஞ்சியம், திருவிழிமிழலை அண்ணியூர் , மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் வேலங்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான நல்லாடை, காலியாக்குடி, திருக்கொட்டாரம், முகந்தனூர், சங்கமங்கலம் நெடுங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நீடாமங்கலம் சித்தமல்லி, ரிசியூர், ஒளிமதி, பச்சைக்குளம் ,பெரம்பூர் ,கானூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story