நாளை மின்தடை

நாளை மின்தடை

பைல் படம் 

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
சேலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய செயற்ெபாறியாளர்கள் குணவர்த்தினி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்திரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, வீட்டு வசதி வாரியம், கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டாபெரிய புதூர், சாரதா கல்லூரி சாலை, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

Tags

Next Story