அறந்தாங்கியில் நாளை மின்தடை

அறந்தாங்கி மின் கோட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி பகுதியில் வியாழக்கிழமை (ஜூன் 13) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். எம். வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மின் கோட்டத்துக்கு உள்பட்ட அழியாநிலை, நாகுடி, கீரமங்கலம், கொடிக்குளம், ராஜேந்திரபுரம், ஆவணத்தான்கோட்டை,மறமடக்கி, ஆவுடையார்கோவில்,அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின்நிலையங்களில் வியாழக்கிழமை (ஜூன் 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.அதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story