சீர்காழி அருகே ஆத்துக்குடியில் நாளை மின் நிறுத்தம்

சீர்காழி அருகே ஆத்துக்குடியில்  நாளை மின் நிறுத்தம்

மின் தடை 

சீர்காழி அருகே ஆத்துக்குடி துணை மின் நிலைய பகுதியில் நாளை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்காழி கோட்டத்தில் வரும் 04-01-2024 வியாழக்கிழமை அன்று வைத்தீஸ்வரன்கோயில் துணைமின் நிலையத்தில் உள்ள 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11 KV ஆத்துகுடி உயரழுத்த மின்பாதையில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது' என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 01. ஆத்துகுடி 02. தருமதானபுரம் 03. கதிராமங்கலம் 4. கொண்டத்தூர் 5.திருநன்றியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மதியம் 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. தமிழ்நாடு மின்வாரிய சீர்காழி கோட்ட உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி தெரிவித்துள்ளார்

Tags

Next Story