குளத்துாரில் நாளை மின்தடை!

குளத்துாரில் நாளை மின்தடை!

மின்தடை (பைல் படம்)

குளத்தூர் (அம்மாசத்திரம்) துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கீரனூர் உப கோட்டத்திற்குட்பட்ட குளத்தூர் (அம்மாசத்திரம்) துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால்நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தபடுகிறது. இதனால் கீரனூர் பேரூராட்சி நீங்கலாக, குளத்தூர், இளையாவயல், நாஞ்சூர், பிரகதாம்பாள்புரம், கிருஷ்ணபாரப்பட்டி, சத்தியமங்கலம், முத்துக்காடு,காவேரி நகர், திருமலை ராயபுரம்,உப்பிலியக்குடி, தாயினிப்பட்டி, விளத்துப் பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. இவ்வாறு கீரனூர் உதவி செயற் பொறியாளர் ஜெம்ஸ்அலெக்ஸாண்டர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story