நேமூர், முண்டியம்பாக்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

நேமூர், முண்டியம்பாக்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
மின் தடை
சங்கீதமங்கலம், விக்கிரவாண்டி, வி.அகரம் பீடர்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கஞ்சனூர், விக்கிரவாண்டி ஆகிய துணைமின் நிலையத்திற்குட்பட்ட சங்கீதமங்கலம், விக்கிரவாண்டி, வி.அகரம் பீடர்களில் பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை நரசிங்கனூர், நேமூர், குன்னத்தூர், செ.புதூர், நங்காத்தூர், நகர், சங்கீதமங்கலம், முட்டத்தூர், மண்டகப்பட்டு, செ.கொளப்பாக்கம், அரசலாபுரம், விக்கிர வாண்டி நகரம், வெங்கடேஸ்வரா நகர், தனலட்சுமி நகர், முண்டியம்பாக்கம், சுங்கச்சாவடி அருகில், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், சமத்துவபுரம், ஆ.குச்சிப்பாளையம், அனிச் சம்பாளையம், இளங்கோ நகர், மணிக்குயில் நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், பாண்டியன் நகர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story