சொர்ணாவூரில் நாளை மின்தடை

சொர்ணாவூரில் நாளை மின்தடை

மின்தடை (பைல் படம்)

சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் கோட்டத்தை சார்ந்த சொர்ணாவூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராம்பாக்கம், ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிப்பாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர் ணாவூர் மேல்பாதி, பட்டறைபாதி, ஏ.ஆர்.பாளை யம், கலிஞ்சிக்குப்பம், வீராணம், கிருஷ்ணாபுரம், பாக்கம், துலுக்கநத்தம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை கண்டமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story