விழுப்புரம் நகர் பகுதியில் நாளை மின்தடை

விழுப்புரம் நகர் பகுதியில் நாளை மின்தடை

பைல் படம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் நகரப் பகுதியில் நாளை மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
விழுப்புரம் நகரப் பகுதிகள், மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (ஜூன் 14) பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை விழுப்புரம் கிழக்கு சண்முகபுரம் காலனி, காந்தி நகா், மகாராஜபுரம், கம்பன் நகா், தேவநாதசுவாமி நகா், ஆசிரியா் நகா், காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story