வெள்ளகோவிலில் நடுரோட்டில் மின் கம்பம்

வெள்ளகோவிலில் நடுரோட்டில் மின் கம்பம்

வெள்ளகோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது


வெள்ளகோவிலில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது

வெள்ளகோவில் கரூர் தேசிய நெடுஞ்சாலை இருந்து செரியன்கிணத்துப்பாளையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதிக்குச் செல்லும் வழியில் 1கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக தார் சாலை போடப்பட்டது.

அப்போது சாலையில் இருந்த மின்கம்பத்தை இடமாற்றி வைக்காமல் அப்படியே 4மீட்டர் அகலம் சாலை போடப்பட்டது சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பாக மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரா வாகனங்கள் மின்கம்பத்தில் மோதும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story