ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்

சிவகாசியில் ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள் இருப்பதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சிவகாசி கட்டளைபட்டி கிராமத்தில் அந்தரத்தில் தொங்கிய மின் கம்பம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஆனையூர் ஊராட்சியில் கட்டளைபட்டி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கூலித்தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது இந்த மின் கம்பங்கள் அடி பகுதி மற்றும் மேல் பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து அபாய நிலையில் காணப்படுகின்றது.இதனால் மின் கம்பத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் அச்சத்திலேயே இருக்கின்றனர். சேதமடைந்த மின் கம்பங்கள் அருகில் குழந்தைகளை விளையாட வைப்பதை பெற்றோர்கள் தவிர்த்து வருகின்றனர்.குறிப்பாக மழை காலங்களில் அந்த வழியாக செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர். சேதமடைந்த மின் கம்பம், எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அடிமட்டத்திலிருந்து சேதமடைந்திருப்பதால், அந்தப் பகுதியைக் கடந்து போகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றனர்.எனவே அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags

Next Story