"சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்" - விவசாயிகள் கோரிக்கை

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் - விவசாயிகள் கோரிக்கை

சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள்

சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் ஒன்றியம், கோளிவாக்கத்தில் விவசாயத்திற்கு தேவையான மின் இணைப்பு வழங்க விளைநிலங்கள் வாயிலாக மின்தட பாதைக்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மூன்று மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. நாளுக்கு நாள் மின்கம்பம் சாய்ந்து வருவதால், மின்கம்பம் எப்போது முற்றிலும் சாய்ந்து விழுமோ என, இப்பகுதி விவசாயிகள் அச்சத்துடன் வயல்வெளிக்குச் சென்று விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோளிவாக்கம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story