டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்

 ஆட்சியா் ச.அருண்ராஜ் 

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் பயன்பெறும் வகையில், செங்கல்பட்டுமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி நடைபெறுகின்றன. மையத்தில் சிறப்பான பயிற்றுநா்கள் மற்றும் இலவச வைஃபை வசதியுடன் தோ்வுக்கான புத்தகங்கள் கொண்ட நூலக வசதியும் உள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது புகைப்படம், விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல் மற்றும் ஆதாா் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடா்பு கொண்டோ, 044-27426020 அல்லது 6383460933 என்ற கைப்பேசி எண்ணிலும் பதிவுசெய்து கொண்டு கலந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி வகுப்புகளில் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் ச.அருண்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Tags

Next Story