ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா

பிரதோஷ விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீ கைலாசநாதர் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் ஸ்ரீ நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் யான பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story