சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷம்

சங்ககிரி அருகே அரசிராமணி சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணியில் சோழீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அரசிராமணி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியநாயகியம்மன் உடனமர் சோழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story