உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

 சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. 

சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு பால். நெய். தேன். இளநீர். பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கரபுரநாதர் சாமிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. இந்த பிரதோஷ தினத்தில் உத்தமசோழபுரத்ைத சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, பூலாவரி, கொண்டலாம்பட்டி, பெரிய புத்தூர், வீரபாண்டி, இளம்பிள்ளை, அரியானூர், சேலம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து கரபுரநாதர் சாமியை வணங்கி வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story