ஸ்ரீ ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடை பெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் உள்ள தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமயக் குரவர்கள் நால்வரால் பாடல் பெற்றதுமான ஸ்ரீ இளங்கிளி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதோஷ வழிபாடு நடை பெற்றது. ஐப்பசி மாதம் வளர்பிறை பிரதோஷத்தையொட்டி கோயில் தலைமை சிவாச்சாரியார் சங்கர், நந்தியம் பெருமானுக்கு பால்,தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 15 - க்கும் மேற்பட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், மலர்களால் அலங்காரமும் மஹா தீபாரதனை நடத்தினர்.அதனை தொடர்ந்து, ரிஷப வாகனத்தில் இளங்கிளி அம்மனுடன் ஆட்சீஸ்வரர் எழுந்தருளி கோயிலின் உட்பிரகார வளாகத்தில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன் பின்னர், மூலவரான ஆட்சீஸ்வரருக்கும், இளங்கிளியம்மனுக்கும் சாயாரட்ச பூஜையும் நடைபெற்றன.அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியும் அம்மனையும் வழிபட்டனர்.


Tags

Next Story