விவசாயிக்கு குவியும் பாராட்டு

விவசாயிக்கு குவியும் பாராட்டு

திருச்சி மாவட்டம் மேட்டுப்பட்டியில் மின்கம்பத்தில் சாய்ந்த பேருந்தினால் ஆபத்து ஏற்படாமல் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்த விவசாயியை பாராட்டினர்.


திருச்சி மாவட்டம் மேட்டுப்பட்டியில் மின்கம்பத்தில் சாய்ந்த பேருந்தினால் ஆபத்து ஏற்படாமல் மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்த விவசாயியை பாராட்டினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நத்தமாங்குடியில் இருந்து நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது. அதேபோல் லால்குடியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு செல்ல எதிரே அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.அப்போது மேட்டுப்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது திருக்காட்டுப்பள்ளிக்கு சென்ற பேருந்துக்கு வழி விடுவதற்காக இந்தப் பேருந்தை சாலை ஓரத்தில் ஒதுக்கிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள மின்கம்பத்தில் சாய்ந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த விபத்தைக் கண்ட மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் துரிதமாக செயல்பட்டு மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்தார். மின் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுத்த விவசாயியால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. தக்க சமயத்தில் மின் இணைப்பைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்த விவசாயி செல்வராஜ்க்கு அப்ப அப்பகுதி பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story