பிரசன்னா வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

பிரசன்னா வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

தென்திருப்பதி பிரசன்னா வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்றார்.

செங்கல்பட்டு மாவட்டம்,படாளம் அருகே உள்ள தென்திருப்பதி என அழைக்கப்படும் திரு மலை வையாவூர் அலமேலு மங்கா நாயக சமேத பிரசன்னா வெங்கடேஸ்வரா பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி இந்த கும்பாபிஷேக விழாவானது சனிக்கிழமை விசேஷ ஆராதனம்,புண்யா அவாசனம், யாக சாலை வாஸ்து யாகம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை விஸ்வரூபம், சுப்ரபாதம், மூர்த்தியாக்கம்,நான்காம் காலை பூஜை, மகா பூர்ணாவதி யாத்ரா தானம் கும்பம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதை தொடர்ந்து அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பட்டாச்சியாளர்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story