மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிராத்தனை

மனவளக்கலை மன்றத்தின் சார்பில் பிராத்தனை

மனவளர் பயிற்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மனவளக்கலை மன்றத்தின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மனவளக்கலை மன்றத்தின் சார்பாக சங்கராபுரம் பழைய ஸ்டேட் பேங்க் வளாகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி மழை தவம் செய்தார்கள். தொடர்ந்து ஐந்தாவது நாளாக மழை தவம் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை தினசரி செய்து வருகிறார்கள், வாட்டி வதைக்கும் வெயிலில் வேகம் குறைய, விவசாய பயிர்கள் பாதுகாத்திட மரம் செடி கொடி பசுமையாக வாழ்ந்திட இந்த தவம் செய்து வருவதாக தவத்தின் பேராசிரியரும் மன்றத்தில் செயலாளருமான முருகன் தெரிவித்தார்.

உடன் மன்றத்தின் தலைவர் ஆர் வி என் சீனிவாசன் மன்றத்தின் பொருளாளர் கிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இதை தவிர பகல் 11.00 மணிக்கு வாசவி மண்டபத்திலும் மாலை 4.30 மணிக்கு அங்காள பரமேஸ்வரி மண்டபத்தின் அருகில் உள்ள அவரது வீட்டிலும் மூன்று வேலைகளும் தவம் செய்து வருகிறார்கள். இது தவம் செய்தால் மழை வருவது உறுதி என்று நம்பிக்கையோடு தெரிவித்துக் கொண்டார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story