மோடி மீண்டும் பிரதமராக வேண்டி தனியார் தோட்டத்தில் வழிபாடு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி தனியார் தோட்டத்தில் வழிபாடு

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி தனியார் தோட்டத்தில் வழிபாடு

பாஜக நிர்வாகி சுதாகர் ரெட்டி வழிபாடு செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது‌

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த கண்டியூர் கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் டாக்டர்.சுதாகர் ரெட்டி ஹோமம் வளர்த்து சிறப்பு சிவகாளி பூஜை மற்றும் கோ பூஜை நடத்தி வழிபட்டார்.

இது குறித்து அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகவும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா உருவாக மக்களின் நல்வாழ்வை வளப்படுத்தவும், தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த பூஜை தனிப்பட்ட முறையில் நடத்தியதாக தெரிவித்தார்.

தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தனியார் தோட்டத்தில் நடத்திய வழிபாடு குறித்த செல்போன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags

Next Story