மழை வேண்டி காவிரி ஆற்றில் இறங்கி வர்ண ஜெபம்

மழை வேண்டி  காவிரி ஆற்றில் இறங்கி வர்ண ஜெபம்

ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் மழை வேண்டி ஆற்றில் இறங்கி வர்ண ஜெபம் நடத்தினர்.


ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் மழை வேண்டி ஆற்றில் இறங்கி வர்ண ஜெபம் நடத்தினர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில்.இத்திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் மழை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும் வேண்டி 21 சிவாச்சாரியார்கள் காவிரி ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நின்று மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து காவிரி தாய்க்கு மலரஞ்சலி செலுத்தி தீபாராதனையும் மேற்கொள்ளப்பட்டது. வெயிலின் தாக்கம் இந்திய அளவில் ஈரோடு 2ம் இடத்தில் உள்ளது.இதனால் வெயிலின் வெப்பத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும்,மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story