திருப்பூர் மாவட்டத்தில் உறை காரணிகள் மருந்து தட்டுப்பாடு

திருப்பூர் மாவட்டத்தில் உறை காரணிகள் மருந்து தட்டுப்பாடு

மனு அளிப்பு 

திருப்பூர் மாவட்டத்தில் ஹீமோபிலியாவால் என்கிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை என நோயாளிகள் வேதனை. கடந்த 6மாதங்களாக பேக்டர் 8, பேக்டர் 9 , ஆகிய உறை காரணி மருந்துகள் இருப்பு இல்லை கை, கால் பாதிப்பு, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் நோயாளிகள் வேதனை. திருப்பூர் மாவட்டத்தில் ஹீமோபீலியா எனும் இரத்த உறைதல் குறைபாட்டு நோய் பாதிப்பில் 70 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரத்த உறையாமைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் தொடர் சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர்காக்கும் மருந்தான உறை காரணிகள் பேக்டர் 7, பேக்டர் 8, பேக்டர் 9, ஆகியவைகள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அருகில் உள்ள மற்ற மாவட்ட மருத்துவமனையில் இந்த மருந்துகளை பெற்று அதனை மருத்துவமனைக்கு வரவழைத்து தொடர் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,ரத்தக்கசிவு ஏற்படும் போதெல்லாம் இத்தகைய உறை காரணி மருந்தை ஊசி மூலம் செலுத்த வேண்டும் ஒரு முறை மருந்து செலுத்தினால் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மட்டுமே அந்த மருந்து வேலை செய்யும் அதற்குள் ரத்தக்கசிவு சரியாகவில்லை என்றால்,

மறுபடியும் ஊசி மூலம் மருந்து செலுத்த வேண்டும் இந்த மருந்தின் நிலையானது ஆறாயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

ஆகவே இந்த ஹீமோபிலியாவால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் தங்களுக்கு தொடர் சிகிச்சை பெற மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர்.

Tags

Next Story