காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மாயம்: போலீசார் விசாரணை

காதல் திருமணம் செய்த கர்ப்பிணி மாயம்: போலீசார் விசாரணை
மாயம் 
சோளிங்கர் அருகே காணாமல் போன கர்ப்பிணி பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (26). களம்பூர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா (25). கல்லூரியில் படிக்கும்போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறியது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சோளிங்கர் அருகே உள்ள கரிக்கல் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது பரிமளா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த பரிமளா நேற்று கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் விஜய், கொண்டபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பரிமளாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story