புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு வாழ்த்துமடல் வழங்கல்

புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு வாழ்த்துமடல் வழங்கல்

வாழ்த்து மடல் வழங்கல் 

புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு தமிழக முதலமைச்சர் அனுப்பிய வாழ்த்துமடலை அமைச்சர் ரகுபதி பயனாளிகளிடம் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப் பெண் திட்ட பயனாளிகளான மாணவிகளுக்கு வாழ்த்துமடல் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுமைப் பெண் திட்ட பயனாளிகளுக்கு வாழ்த்துமடலை வழங்கினார்.

உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.மணி, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) சா.ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில் அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராம்கணேஷ் (புதுக்கோட்டை), நமச்சிவாயம் (அறந்தாங்கி), மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.ந.கோகுலப்பிரியா, ஒன்றியக்குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்) வி.ராமசாமி (அன்னவாசல்), நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story