கெங்கவல்லி பேரூராட்சி மக்கள் கோரிக்கை மனு வழங்கல்

கெங்கவல்லி பேரூராட்சி மக்கள் கோரிக்கை மனு வழங்கல்
அமைச்சரிடம் மனு வழங்கல் 
கெங்கவல்லி பேரூராட்சி மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை, பேரூர் செயலாளர் பாலமுருகன், பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் ஆகியோர் தலைமையில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு சென்னையில் உள்ள இல்லத்தில் சந்தித்து வழங்கினர்.

உடன் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் ,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தங்கபாண்டியன், திட்டக் குழு உறுப்பினர் லதா மணிவேல், மற்றும் இளைஞரணி சந்துரு, சத்யராஜ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story