சேதுபாவாசத்திரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

சேதுபாவாசத்திரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
பொங்கல் தொகுப்பு வழங்கல்
சேதுபாவாசத்திரம் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு, கழுமங்குடா, புதுப்பட்டிணம், ஆண்டிக்காடு, பள்ளத்தூர், சொக்கநாதபுரம், புக்கரம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

வேட்டி, சேலை, பச்சரிசி, ஜீனி, கரும்பு, ரொக்கப் பணம் ரூ.1000 ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை விளக்கி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் பேசினார். நிகழ்ச்சியில், திமுக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் முத்துலெட்சுமி காளிமுத்து, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சக்கரவர்த்தி (முடச்சிக்காடு), அமீர் முகைதீன் (புதுப்பட்டினம்), காளிமுத்து (புக்கரம்பை), ராம்பிரசாத் (சொக்கநாதபுரம்), வரதராஜன் (ஆண்டிக்காடு), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமுதா ராஜேந்திரன், சாகுல் ஹமீது, பாமா செந்தில், சேதுபாவாசத்திரம் வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இப்றாம்ஷா மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story