பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

திருப்பூர், வாலிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை எம்.எல்.ஏ.,செல்வராஜ் வழங்கினார்.
வாலிபாளையத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு செல்வராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட, தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் செல்வராஜ் எம்.எல்.ஏ-. வாலிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், வட்ட செயலாளர் ஆட்டோ தங்கராஜ், மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, திவாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் சூர்யா, தி.மு.க. நிர்வாகி சிவபாலன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story