காஞ்சிபுரம் மாநகர திமுக நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கல்..!

காஞ்சிபுரம் மாநகர திமுக நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டியும் , தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாளையொட்டி , காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் 650 நிர்வாகிகளுக்கு சிறப்பு கைக்கடிகாரங்கள் வழங்கும் விழா மாநகர திமுக செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்ட மாநகரத்தில் உள்ள 650 நிர்வாகிகளுக்கு கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உதயநிதி பிறந்தநாள் விழா சிறப்பு கைக் கடிகாரத்தினை வழங்கினர்.

விழாவில் பேசிய செயலாளர் சுந்தர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும், வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், பகுதி கழக செயலாளர் மாமன்ற உறுப்பினர்கள் வட்ட செயலாளர் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து அண்ணா பவள விழா மாளிகையில் மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டில் இளைஞரணி சார்பாக திரளான நபர்கள் கலந்து கொள்வது,

வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 6000 அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் அன்னதானங்கள் வழங்குதல் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story