பொங்கலை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு

பொங்கலை முன்னிட்டு காய்கறிகள் விலை உயர்வு

காய்கறி விலை உயர்வு

திண்டுக்கல், அம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சி அம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் பொங்கலை முன்னிட்டு வியாபாரிகள் அதிக அளவில் காய்கறிகளை கொள்முதல் செய்தனர். இதன் காரணமாக வெண்டை, கொத்தவரை, முருங்கை, பூசணிக்காய் உள்ளிட்ட பல காய்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. கிலோ ₹80க்கு விற்ற முருங்கை ₹120, ₹10 க்கு விற்ற பூசணிக்காய் ₹20, ₹27க்கு விற்ற வெண்டைக்காய் ₹45, ₹25க்கு விற்ற கொத்தவரைங்காய் ₹65க்கு விற்பனையானது.

Tags

Next Story