தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் விலை அதிகரிப்பு

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.10.43 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரியில் நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். பட்டுக்கூடு சாகுபடி பரப்பு அண்மையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பட்டுக்கூடு உற்பத்தி கணிசமாக உயர்ந்தது.நேற்று 2,414 கிலோவாக குறைந்தது. நேற்று கிலோவிற்கு ரூ.23 விலை அதிகரித்தது. நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக 603 ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக ரூ.279-க்கும், சராசரியாக 432.15 ரூபாய்க்கும் விற்பனை யானது. மொத்தம் 10 லட்சத்து 43 ஆயிரத்து 618 ரூபாய் மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது

Tags

Next Story