அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்

அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்
 அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்
விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம்.
விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய், பாமாயில் மற்றும் குண்டூர் வத்தல் விலை குறைந்தது. அதேவேளை துவரும் பருப்பு, பாசிப் பயறு ஆகியவற்றின் விலையானது உயர்ந்து காணப்பட்டது. விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ.2800 என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.20 குறைந்துள்ளது. எனவே, ரூ.2780 என விற்பனையாகிறது. பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1375 என விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.5 குறைந்துள்ளது. எனவே, டின் ஒன்று ரூ.1370 என விற்பனை செய்யப்படுகிறது. குண்டூர் வத்தல் 100 கிலோ கடந்த வாரம் ரூ.18ஆயிரம் முதல் 20 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சந்தைக்கு வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, ரூ.16ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு நாடு வகை 100 கிலோ ரூ.12ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 வரை உயர்த்தப்பட்டு ரூ.12,100க்கு விற்பனையாகிறது. துவரம் பருப்பு புதுசு லையன் கடந்த வாரம் ரூ.12,900 என விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.200 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.13100 என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ ரூ.10,600 என் விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 வரை குறைந்துள்ளது. எனவே, குவிண்டால் ஒன்று ரூ.10,300 என விற்கப்படுகிறது. உளுந்து லயன் 100 கிலோ ரூ.10ஆயிரம் என விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.300 உயர்ந்துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,300 என விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பயறு லயன் மீடியம் வகை கடந்த வாரம் ரூ.10,200 என விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.300 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.10,500 என விற்கப்படுகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Next Story