விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் துவங்கிய பிரதமர் மோடி

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் துவங்கிய பிரதமர் மோடி

தியானம் துவக்கம்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை பிரதமர் மோடி துவங்கினார்.

கன்னியாகுமரி விவேகானந்தா பாறையில் பிரதமர் மோடி இன்று முதல் நாளை 1 -ம் தேதி வரை 45 மணிநேரம் விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி தியானம் செய்கிறார். இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் மோடி டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தார். கன்னியாகுமரி விருந்தினர் மாளிகை வந்த அவர் கார் மூலம் குமரி பகவதி கோவிலில் அம்மனை தரிசனம் செய்தார்.

பின்னர் சரியாக 6.05 மணியாவில் பலத்த பாதுகாப்புடன் படகில் ஏறிய பிரதமர் 6.15 மணியாவில் கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் சென்றடைந்தார். விவேகானந்தர் மண்டபம் சென்ற பிரதமர் முதலில் ராமகிருஷ்ண பரமஹம்சர், சகோதரி நிவேதிதை படங்களை வணங்கினார். பின்னர் சுவாமி விவேகானந்தர் உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விவேகானந்தர் தியானம் செய்த இடமான தியான மண்டபத்தில் பிரதமர் தனது தியானத்தை தொடங்கினார்.

Tags

Next Story