பாலியல் புகாரில் சிக்கிய தனியார் கல்லூரி முதல்வர் !

பாலியல் புகாரில் சிக்கிய தனியார் கல்லூரி முதல்வர் !

பணி இடைநீக்கம் 

பாலியல் புகாரில் சிக்கிய தனியார் கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம் செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தில் உள்ள ஒரு தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரியில் முதல்வராக பாலாஜி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்களும், பேராசிரியைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே பாலாஜி மீது சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கல்லூரியை சேர்ந்த 2 பணியாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாலியல் புகார் எழுந்துள்ளதால் பாலாஜியை பணி இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags

Next Story