பிரின்சிபல் ஆபாச பேச்சு: நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

பிரின்சிபல் ஆபாச பேச்சு:  நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி.

சமயபுரம் அருகேயுள்ள நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர், கல்லூரி முதல்வரின் ஆபாச பேச்சு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த இருங்களூரில் உள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே கிருஷ்ணா நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பாரா மெடிக்கல், பார்மசி, நர்சிங், யோகா என பல பிரிவுகளில் படித்து வருகின்றனர்.மேலும் இக்கல்லூரியில் 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை கிழக்கு வளவு அரியூர்நாடு பகுதியை சேர்ந்த முருகேசன், ஓமனா தம்பதியின் மகள் சத்தியப்ரீத்தி ( 20).இந்த கல்லூரியில் இறுதியாண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். நேற்று மாணவி சத்தியப்ரீத்தி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் போலீசாருக்கும், இறந்த மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் இறந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் கல்லூரியில் பணம் கட்ட சொல்லி நெருக்கடி கொடுப்பதாகவும்,தகாத வார்த்தைகளால் திட்டி இழிவு படுத்துவதாகவும் சக மாணவிகள் ,இறந்த மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story