திருச்சி மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை…!

திருச்சி மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை…!

திருச்சி மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.


திருச்சி மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1500 க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், தஞ்சை சின்னக்கடை வீதியை சேர்ந்த வெற்றிவேல் (48) என்பவர் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததாலும் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் என போலீசார் விசாரணையில் தெரிய வந்ததால் அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு அவர் சிறை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சக கைதிகள் சிறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக வெற்றிவேலை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . அதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டது. வெற்றிவேல் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக கைதிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story