ஆண் சிசு சடலம் அடக்கம் செய்த தனியார் அமைப்பினர்

ஆண் சிசு சடலம் அடக்கம் செய்த தனியார் அமைப்பினர்

சிசு அடக்கம்

காங்கேயம் அருகே தண்ணீரில் மிதந்து வந்த ஆண் குழந்தையின் சிசு இறந்த நிலையில் மீட்டு பிரேத பரிசோதனை செய்த காவல்துறையினர் பின்னர் சமூக ஆர்வலர்களின் உதவியுடன் அடக்கம் செய்தனர்.

காங்கயம்-தாராபுரம்‌ சாலையில் அமைந்துள்ள பொத்தியம் பாளையம் பிரிவு உள்ள பிஏபி கால்வாயில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இறந்த நிலையில் ஆண் சிசு ஒன்று மிதந்து வந்தது. இதனை தொடர்ந்து காங்கேயம் போலீஸ் இந்த குழந்தை பற்றிய விவரங்களையும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் காங்கேயத்தை சேர்ந்த‌ (பசியை போக்குவோம் ) தனியார் சமூக தொண்டு நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து அந்த ஆண் சிசுவை அரசு அனுமதி பெற்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து காங்கேயம் கொண்டு வந்து காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள மின் மயானம் எதிர்புறம் உள்ள காட்டில் முழு சம்பரதாயம், சடங்குகளுடன் புதைத்தனர்.

Tags

Next Story