கோவை: நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

கோவை: நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி

விபத்து

கோவையில் தனியார் பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடும் காட்சி நெஞ்சை பதரவைத்துள்ளது.

கோவை சிங்காநல்லூரில் இருந்து காந்திபுரம் வழியாக கணுவாய் செல்லும் தனியார் பேருந்து நேற்று அதிகாலை காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றது.

அப்பொழுது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து காவல் துறை சார்பில் அங்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை மீறி பயணிகள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் 10 பேர் காயம் அடைந்தனர். குறிப்பாக கார்த்திக் என்பவருக்கு காலிலும்,முருகேசன் என்பவருக்கு இரு கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து காயமடைந்த பொது மக்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். சிறு சிறு காயங்களுடன் எட்டு பேர் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

காயமடைந்த கார்த்தி மற்றும் முருகேசன் ஆகியோர் இது தொடர்பாக காந்திபுரம் போக்குவரத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் சஞ்சீவி என்பவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் வாகனத்தை ஒட்டி வந்த சஞ்சவீ என்பவர் தேடி வருகின்றனர். இதனிடையே விபத்து ஏற்பட்ட பொழுது பேருந்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story