சரக்கு ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து

சரக்கு ஆட்டோ மீது மோதிய தனியார் பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே முன்னால் வந்த டேங்கர் லாரி மீது மோதுவதை தவிர்க்க, அதிவேகமாக வந்த தனியார் பேருந்து திசை திருப்பிய பொழுது, நின்று கொண்டிருந்த டாட்டா ஏசி மற்றும் மின்கம்பத்தின் மோதி விபத்துக்குள்ளானதில் அருகில் உள்ள மூன்று கிராமங்களுக்கு மின்தடை ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்க சென்ற டேங்கர் லாரியின் ஓட்டுனர் தனது வண்டியை பள்ளிபாளையம் வெப்படை செல்லும் சாலையில் திருப்புவதற்காக பின்புறமாக செலுத்தினார்.

அப்பொழுது ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது சாலையில் குறுக்கே டேங்கர் லாரி எதிர்பாராமல் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது வாகனம் விபத்து ஏற்படுத்தாமல் தவிப்பதற்காக, திருப்பிய பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ வாகனம் மற்றும் மின் கம்பத்தில் மோதி நின்றது.

அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் காயமின்றி தப்பினர்.. மின்கம்பம் உடைந்து சேதமானது ..இதன் காரணமாக ஈக்காட்டூர் வெடியரசம் பாளையம் மற்றும் ஒட்டமெத்தை பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது... விபத்து குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story