தனியார் பேருந்து நடத்துநர் கீழே விழுந்து பலி

தனியார் பேருந்து நடத்துநர் கீழே விழுந்து பலி

பலி

தனியார் பேருந்து நடத்துநர் கீழே விழுந்து பலி. போலீசார் விசாரணை.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் முருகன்(50). இவர் தனியார் பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் முருகன் பணியில் இருந்தார். அவருடன் சகாதேவன்(49) என்பவர் ஓட்டுநராக பணியில் இருந்துள்ளார். பூந்தமல்லியில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த போது பேருந்தின் படிக்கட்டில் நடத்துநர் முருகன் நின்று கொண்டு இருந்துள்ளார். சரியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை திருமழிசை கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்த நடத்துநர் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் முருகன் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார் முருகன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story