தனியார் கல்லூரி காவலாளி விபத்தில் மரணம்
காவல்துறை விசாரணை
police station
தனியார் கல்லூரி காவலாளி விபத்தில் மரணம். போலீசார் விசாரணை.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலை சேர்ந்தவர் தனியார் கல்லூரி காவலாளி லட்சுமணன். இவர் நேற்று முன்தினம் கோபாலசமுத்திரத்தில் இருந்து மேலச்செவலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயம் அடைந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்.24) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story