தனியார் கல்லூரியை மாணவிகள் பேருந்து விபத்தில் காயம் !

தனியார் கல்லூரியை மாணவிகள் பேருந்து விபத்தில் காயம் !

காவல் நிலையம்

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் பேருந்து விபத்தில் காயம் அடைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கல்லூரி முடிந்து வீடுகளுக்கு கல்லூரி பேருந்தில் சென்றனர். பேருந்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பயணித்த நிலையில் தேவதானப்பட்டி பைபாஸ் சாலையில் பேருந்து செல்லும் போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து எதிரே வந்த கார் மீது மோதியது இதில் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மற்றும் கார் டிரைவர் காயம் அடைந்தனர். இந்த விபத்துக்கு குறித்து தேவாரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story