ஒகேனக்கல்லில் தனியார் நிறுவன இயக்குனர் தற்கொலை

ஒகேனக்கல்லில் தனியார் நிறுவன இயக்குனர் தற்கொலை

காவல்துறை விசாரணை


ஒகேனக்கல்லில் தமிழ்நாடு ஹோட்டலில் பெங்களூரு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன இயக்குனர் விஷம் அருந்தி தற்கொலை ஒகேனக்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல்லில் தமிழ்நாடு ஓட்டல் உள்ளது. இங்கு கர்நாடகா மாநிலம் பெங்களூரு யஸ்வந்த்பூர் பீனியா மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வசித்து வந்த அமித்சோனி தங்கியிருந்தார். கடந்த 19ம் தேதி மாலை, வெளியே சென்று விட்டு அவர் அறைக்கு வந்தார். மறுநாள் மாலை வரை, அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இத னால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவ ரது அறை கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்க வில்லை. உடனே இதுபற்றி ஒகேனக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த காவலர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு அமித்சோனி, விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடந் தது தெரிந்தது. அவரது உடலை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவலர்கள் நடத்திய விசாரணையில், அமித்சோனி பெங்களூரு வில் உள்ள தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன், வேலை சம்மந்தமாக சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட அமித்சோனி, ஒகேனக்கல் வந்ததும், அங்கு அறை எடுத்து தங்கியிருந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டதும் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story