வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- 2000-கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- 2000-கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வேலைவாய்ப்பு முகாம் 

வேலூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்- 2000-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூரில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. சாய்நாதபுரம் டி.கே.எம்.மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாகமில், ஸ்டேட் பேங், எஸ்.ஆர்.எம். உள்ளிட்ட 95 தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று தங்களது நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து சென்றன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2000-த்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பெண்களுக்கு பணி நியமன ஆணையை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினர். பணி நியமன ஆணை பெற்றவர்கள் தேர்வான நிறுவங்களில் பணிக்கு இன்றே சேர்ந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Tags

Next Story