தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டார். உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன்கள் ராஜவேல், சாந்தி இளங்கோவன் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில் 104 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்தனர். 5,714 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர். இதில், 749 பேரை தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்தனர்.

Tags

Next Story