நாகப்பட்டினத்தில் வரும் 21ல் தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினத்தில் வரும் 21ல் தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

நாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 21ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.  

நாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வரும் 21ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.06.2024 அன்று நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் .ஜானி டாம் வர்கீஸ்தகவல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இந்த மாதம் 21.06.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு. 10-ம் வகுப்பு. 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் இம்முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே, கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்.

Tags

Next Story