புதுக்கடையில் தனியார் நிதி நிறுவனம் மோசடி - போலீசில் புகார்

புதுக்கடையில் தனியார் நிதி நிறுவனம் மோசடி - போலீசில் புகார்
போலீசில் புகாரளித்த மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்த கட்டிடத்தில் எஸ் எம் சி என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது. இந்த நிதி நிறுவனம் துவங்கும்போதே இதில் வேலை பார்க்கக் கூடிய பணியாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் வாங்கி 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கியதாக பிரச்னை ஏற்பட்டது. பின்னர் இந்த நிறுவனம் தினசரி 100 ரூபாய் வசூலித்து 100 நாட்கள் முடிந்தவுடன் 11ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 100 நாட்களைக் கடந்த பின்னரும் தொகை வழங்காததால், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டனர். நேற்று மாலை இப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் புதுக்கடை போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகார் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையில், இந்த நிறுவனம் சுமார் 50 கோடி ரூபாய் வரை சுருட்டி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விசாரனை நடை பெற்று வருகிறது.

Tags

Next Story