அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தாடைகள் பரிசளித்த தனியார் பள்ளி மாணவர்கள் 

பேராவூரணி குமரப்பா பள்ளி மாணவர்கள், அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தீபாவளி பரிசு அளித்தனர்.

தீபாவளியை ஒவ்வொரு குடும்பத்தினரும் சிறப்பாக கொண்டாட விரும்பும் இந்த நேரத்தில், பேராவூரணி குமரப்பா பள்ளி மாணவர்கள் தாங்கள் சேமிப்பில் இருந்து, பெத்தனாட்சிவயல், துறையூர், குறவன்கொல்லை, ஏனாதிகரம்பை கிழக்கு, பின்னவாசல், பின்னவாசல் தெற்கு, படப்பனார்வயல் ஆகிய அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வரும், மாணவர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடைகள் வழங்கி மகிழ்வித்தனர். பு

த்தாடைகள் வாங்க தங்களது சேமிப்பை செலவிட்ட குமரப்பா பள்ளி மாணவர்களை, அதன் தாளாளர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், அஸ்வின் கணபதி, நபிஷாபேகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இதில், ஊராட்சி தலைவர்கள் வைரவன் (குருவிக்கரம்பை), கண்மணி நடராஜன் (பின்னவாசல்) , விஜயபாஸ்கரன் (சொர்ணக்காடு), மரக்காவலசை முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், அம்மையாண்டி மல்லிகை சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story