காரியாபட்டி அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாணவருடன் மாயம்

காரியாபட்டி அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாணவருடன் மாயம்

கைது செய்யப்பட்ட ஆசிரியை

காரியாபட்டி அருகே மாணவருடன் மாயமான தனியார் பள்ளி ஆசிரியை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவர் ஒருவர் காரியாபட்டி, மந்திரிஓடை அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்து தற்போது வீட்டில் இருந்து வந்தவர் கடந்த 15ஆம் தேதி திடீர் என மாணவர் காணவில்லை.

ஆனால் அந்த மாணவன் ஒரு கடிதத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க போவதாக வீட்டில் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து மாணவரின் தந்தை ஆவியூர் போலீசில் புகார் செய்தார் இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் மாணவருக்கும் இவர் படித்த அந்த பள்ளியின் கணினி அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்த மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த பாத்திமாகனி (40), என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்த பாத்திமாகனி என்பவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது அந்த மாணவன் பிளஸ் டூ படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

பள்ளி மாணவன் பிளஸ் டூ படிக்கும் பொழுது வீட்டுப்பாடம் எழுதி வராத நிலையில் அந்த மாணவனுக்கு ஆசிரியை பாத்திமாகனி என்பவர் வீட்டு பாடத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அதிலிருந்து மாணவனுக்கும் ஆசிரியைக்கும் காதல் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த அந்த பள்ளி நிர்வாகம் ஆசிரியை பாத்திமாகனியை அவர்களது மற்றொரு பள்ளியான மேலூருக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளனர். தற்போது ஆசிரியை பாத்திமாகனி அந்த பள்ளியில் பணிபுரியாமல் வீட்டில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவனை காணவில்லை என்று கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடிய போது பாண்டிச்சேரி பகுதியில் இருவரும் இருப்பதை அறிந்த போலீசார்,

அங்கு விரைந்து சென்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் நான்கு நாட்களாக பாண்டிச்சேரி பகுதியில் ஆசிரியை பாத்திமாகனியும், மாணவனும் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி மாணவனை கல்லூரியில் சேர்க்கவே அழைத்து வந்ததாக ஆசிரியை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

உடனே போலீசார் இருவரையும் ஆவியூர் காவல் நிலையம் அழைத்து வந்து மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு தனியார் பள்ளி ஆசிரியை பாத்திமாகனியை 18 வயது பூர்த்தியாகாத மாணவனை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்று லாட்ஜில் தங்கியதால் ஆவியூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story